‛‛கல்லுக்குள் ஈரம்'' நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

7

சென்னை : 80களில் பிரபலமாக இருந்த நடிகை அருணாவின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

பாரதிராஜா இயக்கிய ‛கல்லுக்குள் ஈரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அருணா. தொடர்ந்து ‛சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது, நாடோடி ராஜா, டார்லிங் டார்லிங் டார்லிங், முதல் மரியாதை, கரிமேடு கருவாயன்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

Latest Tamil News

இவரது கணவர் மோகன் குப்தா பிரபல தொழிலதிபர். வீடு, நிறுவனம் உள்ளிட்ட உள்கட்டமைப்புக்கான அலங்காரப் பணிகளை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னை, நீலாங்கரையில் கணவர், பிள்ளைகளுடன் அருணா வசித்து வருகிறார்.

இந்நிலையில் மோகன் நடத்தி வரும் நிறுவனத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கிடைத்த புகார் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் இவரது வீடு, அலுவலங்களில் காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மோகன், அருணா உள்ளிட்ட குடும்பத்தாரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சோதனையின் நிறைவடைந்த பின்னர் ஏதேனும் ஆவணங்கள் சிக்கியதா உள்ளிட்ட விபரம் தெரியவரும்.

Advertisement