குளத்தை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

உத்திரமேரூர்:-புலிவாய் பொதுக்குளத்தை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், புலிவாய் கிராமத்தில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
இங்குள்ள, புத்தளி சாலையோரம் பொது குளம், அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
இந்த குளத்து தண்ணீர் கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்பட்டு வருகிறது. இந்நிலையில், பொது குளம் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குளத்தின் கரையில் கருவேல மரங்கள், செடிகள் வளர்ந்து உள்ளன.
மேலும், குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கோரை புற்களும் வளர்ந்து வருகின்றன. தற்போது, குளம் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.
எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன், குளத்தை துார்வாரி சீரமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
அச்சு முறிந்ததால் விபரீதம் சுவாமியுடன் சாய்ந்தது தேர்
-
குஜராத்தில் பாலம் இடிந்ததில் 9 பேர் பலி: ஆற்றில் விழுந்த லாரி, கார்கள்
-
விநாயகர் சதுர்த்தி நாளில் கச்சத்தீவில் கொடியேற்றுவோம்: அர்ஜூன் சம்பத்
-
பவன் கல்யாண் வியூக வகுப்பாளர் அ.தி.மு.க.,வுக்கு வியூகம் வகுப்பு
-
‛‛கல்லுக்குள் ஈரம்'' நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு
-
ராமதாஸ் - அன்புமணி இணைந்து செயல்பட கோரி 5 பேர் தீக்குளிக்க முயற்சி