முதல்வர் ஸ்டாலினுடன் திருமா சந்திப்பு ஏன்?

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி துவக்கியுள்ள, 'மக்கள் யாத்ரா' வெற்றி பெற, வி.சி., தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தது, தி.மு.க., கூட்டணியில் சலசலப்பை உருவாக்கிய நிலையில், அவர், முதல்வர் ஸ்டாலினை திடீரென நேற்று சந்தித்து பேசினார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழகம் முழுதும், 'மக்கள் யாத்ரா' பயணத்தை மேட்டுப்பாளையத்தில் நேற்று முன்தினம் துவக்கினார்.
இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், “மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற பழனிசாமியின், 'மக்கள் யாத்ரா' பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்,” என்றார்.
'தி.மு.க., கூட்டணியில் வி.சி., அங்கம்வகிக்கும் நிலையில், அ.தி.மு.க., வெற்றிக்கு அவர் எப்படி வாழ்த்து தெரிவிக்கலாம்; தேர்தலில் தி.மு.க., தோல்வி பெற வேண்டும் என, திருமாவளவன் கருதுகிறாரா?' என, தி.மு.க.,வினர் தலைமையிடம் கேள்வி எழுப்பினர்.
இது கூட்டணியில் சலசலப்பை உருவாக்கியது. இதற்கிடையில், 'தி.மு.க., கூட்டணியில், ராமதாஸ் அணியின் பா.ம.க., இடம்பெற வாய்ப்புள்ளது; பா.ம.க., இரண்டு அணிகளாக பிரிந்தது, தி.மு.க.,விற்கு சாதகம்' என, மூத்த அமைச்சர்கள் தங்களுக்கு நெருக்கமான எம்.எல்.ஏ.,க்களிடம் பேசி உள்ளனர்.
இது உண்மையா என அறிய, திருமாவளவன் விரும்பினார்.
இதற்காக தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் நேற்று சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் உள்ள பள்ளி - கல்லுாரி, மாணவ - மாணவியர் விடுதிகள், 'சமூக நீதி விடுதிகள்' என இனி அழைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் தேர்தல் கூட்டணி குறித்து பேசி உள்ளார்.
அப்போது தி.மு.க., கூட்டணியில், கூடுதலாக சில கட்சிகள் இடம் பெற்றாலும், இட ஒதுக்கீட்டில், வி.சி.,க்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படும் என, முதல்வர் உறுதி அளித்து உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
@block_B@
சென்னை அறிவாலயத்தில், திருமாவளவன் அளித்த பேட்டி:பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான அனைத்து விடுதிகளையும், ஒரே பெயரில் அழைக்கும் வகையில் அரசாணை பிறப்பித்ததற்காக, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். இதை, தி.மு.க., அரசின் பாராட்டத்தக்க சாதனையில் ஒன்றாக பார்க்கிறோம். தி.மு.க., ஆட்சியில், ஈ.வெ.ராமசாமி வழியில் படிப்படியாக, ஜாதி, மத அடையாளங்களை அழித்து எறியும் பணிகளை, முதல்வர் ஸ்டாலின் உறுதியாக நின்று செயல்படுத்தி வருகிறார்.தமிழகத்தை பொறுத்தவரை, எப்போதும் இருமுனை போட்டி தான். எப்போதும், தி.மு.க., கூட்டணிக்கும், அ.தி.மு.க., கூட்டணிக்கும் தான் போட்டி. மூன்றாவது அணி யார் என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டு விடுகிறேன். ஆனால், அவ்வணியினர் பெரிதாக எதுவும் சாதிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.block_B














மேலும்
-
அச்சு முறிந்ததால் விபரீதம் சுவாமியுடன் சாய்ந்தது தேர்
-
குஜராத்தில் பாலம் இடிந்ததில் 9 பேர் பலி: ஆற்றில் விழுந்த லாரி, கார்கள்
-
விநாயகர் சதுர்த்தி நாளில் கச்சத்தீவில் கொடியேற்றுவோம்: அர்ஜூன் சம்பத்
-
பவன் கல்யாண் வியூக வகுப்பாளர் அ.தி.மு.க.,வுக்கு வியூகம் வகுப்பு
-
‛‛கல்லுக்குள் ஈரம்'' நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு
-
ராமதாஸ் - அன்புமணி இணைந்து செயல்பட கோரி 5 பேர் தீக்குளிக்க முயற்சி