இந்தியாவின் சக்திகள் இரண்டு; ஒன்று மக்கள்தொகை, மற்றொன்று ஜனநாயகம்: பிரதமர் மோடி

புதுடில்லி: ''இந்தியா 2 சக்திகளை கொண்டுள்ளது. ஒன்று மக்கள்தொகை, மற்றொன்று ஜனநாயகம் என உலகம் நம்புகிறது'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரவாதம்
வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு பகுதியாக ரோஜ்கர் மேளா திட்டம் உள்ளது. தேசத்தை கட்டியெழுப்ப முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. இந்தியா 2 சக்திகளை கொண்டுள்ளது. ஒன்று மக்கள்தொகை, மற்றொன்று ஜனநாயகம் என உலகம் நம்புகிறது. இளைஞர்களின் இந்த திறன் மிகப்பெரிய மூலதனம். நாட்டின் எதிர்காலத்திற்கு பெரிய உத்தரவாதம்.
பயன் அளிக்கும்
நான் சமீபத்தில் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டு நாடு திரும்பி உள்ளேன்.
மற்ற நாடுகளுடன் நாம் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் நிச்சயமாக நமது இளைஞர்களுக்கு பயன் அளிக்கும். ரோஜ்கர் மேளா திட்டம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு அவர்கள் பங்கு முக்கியமானதாக மாறுவதற்கும் நமது அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.








மேலும்
-
ஜூலை 14ல் பூமி திரும்பியதும் 7 நாட்கள் சுக்லா மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்; ஏற்பாடுகள் தீவிரம்
-
திருமலா பால் நிறுவன அதிகாரியை போலீசார் மிரட்டவில்லை: சென்னை போலீஸ் கமிஷனர்
-
சென்னை-சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் 217 பேர் கடும் அவதி
-
விமான விபத்து அறிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை: இந்திய விமானிகள் சங்கம் நிராகரிப்பு
-
வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள்: தமிழகத்திலும் அமல்படுத்த உத்தரவு
-
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம்: விசாரணையை துவக்கியது சி.பி.ஐ.,