விவாகரத்து கேட்ட 8 ஜோடி லோக் அதாலத்தில் சமரசம்
தங்கவயல்:தங்கவயல் நீதிமன்றத்தில் நேற்று நடந்த தேசிய லோக் அதாலத்தில், விவாகரத்து வழக்கில் எட்டு ஜோடிகள் சேர்த்து வைக்கப்பட்டனர்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் தேசிய லோக் அதாலத், நேற்று தங்கவயல் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிவகுமார், ஜெயலட்சுமி, முசாபர் ஏ.மஞ்சரி, வினோத் குமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. நிலுவையில் உள்ள விவாகரத்து, ஜீவனாம்சம், வாகன விபத்து வழக்குகள், வங்கிகளில் வட்டி வசூல், மின் கட்டண பாக்கி, செக் மோசடி ஆகியவைகளில் தீர்வு காண்பதற்காக 2,579 வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டன. இதில் 2,497 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.
செக் மோசடி உட்பட பல்வேறு பணத் தகராறு வழக்குகளில், 1 கோடியே 71 லட்சத்து 79 ஆயிரத்து 321 ரூபாய்க்கு தீர்வு ஏற்பட்டதாக தங்கவயல் செஷன்ஸ் நீதிமன்ற முதன்மை நீதிபதி சிவகுமார் தெரிவித்தார்.
விவாகரத்து கோரிய வழக்குகளில் சேர்ந்து வாழ ஒப்புக் கொண்ட எட்டு ஜோடிகளுக்கு மாலை அணிவித்து சேர்த்து வைத்தனர். அவர்களுக்கு, நீதிபதி வினோத் குமார் அறிவுரை வழங்கினார்.
வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜகோபால் கவுடா உட்பட பல வக்கீல்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
செஞ்சி கோட்டை பெருமைக்கு 348 ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளமிட்ட சத்ரபதி சிவாஜி
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைந்தது: கனடா பல்கலை, கல்லுாரிகளில் 10,000 பேர் வேலை இழப்பு
-
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கக்கூடாது; தேர்வாணைய தலைவர் தகவல்
-
தி.மு.க., சர்க்கார் சாரிம்மா மாடல் சர்க்காராக மாறி விட்டது; ஆர்ப்பாட்டத்தில் விஜய் ஆவேச பேச்சு!
-
டிரைவருக்கு மாரடைப்பு; அரசு பஸ் தாறுமாறாக சென்றதில் ஒருவர் பலி
-
4 பேருக்கு நியமன எம்.பி., பதவி: அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு