பாசம் காட்டாத தாய் புலி பரிதவித்து இறந்த 3 குட்டிகள்
பெங்களூரு: பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் ஹிமதாஸ் என்ற பெண் புலி உள்ளது. இந்த புலி, கடந்த 7ம் தேதி மூன்று குட்டிகளை ஈன்றது. கடந்த சில நாட்களாகவே, தாய் புலி குட்டிகளை சரியாக பராமரிக்காமல் வந்தது. குட்டிகளின் உடல் நிலை மோசமானது.
இதனால், குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டு மருத்துவம் அளித்தனர். இருப்பினும், கடந்த 8ம் தேதி ஒரு ஆண் குட்டியும், 9ம் தேதி ஆண், பெண் என இரு குட்டிகளும் இறந்தன. இறந்த குட்டிகளின் உடலை, கால்நடை மருத்துவர் குழு பிரேத பரிசோதனை செய்தது.
பரிசோதனை முடிவுகளில், தாய் புலி மிதித்ததில் குட்டிகளின் உடலில் காயங்கள் ஏற்பட்டதும், தாய்ப்பால் ஒழுங்காக அளிக்காததாலும் குட்டிகள் இறந்தது தெரிய வந்துள்ளது.
இதை நேற்று உறுதிப்படுத்திய பன்னரகட்டா உயிரியல் பூங்கா அதிகாரிகள், மற்ற உயிரினங்களை விட, தன் குட்டிகளை வளர்ப் பதில் புலிகள் ஆர்வம் காட்டுவது குறைவு என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
கடலில் மூழ்கிய இலங்கை படகு; சுற்றுலா பயணிகள் உயிர் தப்பிய திக்...திக்...காட்சி!
-
செஞ்சி கோட்டை பெருமைக்கு 348 ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளமிட்ட சத்ரபதி சிவாஜி
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைந்தது: கனடா பல்கலை, கல்லுாரிகளில் 10,000 பேர் வேலை இழப்பு
-
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கக்கூடாது; தேர்வாணைய தலைவர் தகவல்
-
தி.மு.க., சர்க்கார் சாரிம்மா மாடல் சர்க்காராக மாறி விட்டது; ஆர்ப்பாட்டத்தில் விஜய் ஆவேச பேச்சு!
-
டிரைவருக்கு மாரடைப்பு; அரசு பஸ் தாறுமாறாக சென்றதில் ஒருவர் பலி