கைதான வாலிபர் 45 பெண்களை ஆபாச வீடியோ எடுத்தது அம்பலம்

பெங்களூரு:பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கைதான வாலிபர், 45 பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரில் பொது இடங்களில் நடந்து செல்லும் பெண்கள், காதலனுடன் தனியாக இருக்கும் இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்ட குர்தீப்சிங் என்பவரை, பனசங்கரி போலீசார் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
அவரது மொபைல் போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது, இளம்பெண்கள், சிறுமியர் என 12 பேரின் ஆபாச வீடியோக்கள் இருந்தது. குர்தீப்சிங்கிடம் விசாரித்த போது 45 பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்ததையும், இதில் 33 பெண்களின் ஆபாச வீடியோவை அழித்ததாகவும் கூறினார்.
பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, அவர்களுக்கு அனுப்பி குர்தீப்சிங் பணம் பறித்து இருக்கலாம் என்றும், பணம் கிடைத்த பின் ஆபாச வீடியோவை அழித்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். விசாரணை நடக்கிறது.
மேலும்
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைந்தது: கனடா பல்கலை, கல்லுாரிகளில் 10,000 பேர் வேலை இழப்பு
-
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கக்கூடாது; தேர்வாணைய தலைவர் தகவல்
-
தி.மு.க., சர்க்கார் சாரிம்மா மாடல் சர்க்காராக மாறி விட்டது; ஆர்ப்பாட்டத்தில் விஜய் ஆவேச பேச்சு!
-
டிரைவருக்கு மாரடைப்பு; அரசு பஸ் தாறுமாறாக சென்றதில் ஒருவர் பலி
-
4 பேருக்கு நியமன எம்.பி., பதவி: அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
-
ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி; ஷேக் ஹசீனா மகளை விடுப்பில் அனுப்பியது உலக சுகாதார நிறுவனம்