போலீசார் அடித்ததாக பதிவிட்டவர் கைது
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த நெட்டவேலம்-பாளையத்தை சேர்ந்தவர் வினோத், 30; இவர், அதே பகு-தியை சேர்ந்த பழனியம்மாள் என்பவரை கொலை மிரட்டல் விடுத்து, அவதுாறாக பேசியுள்ளார்.
இதுகுறித்து புகார்படி, வெப்படை போலீசார், விசாரணைக்காக வினோத்தை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றுள்ளனர். அப்போது, போலீசாரி-டமும் பிரச்னை செய்துள்ளார். மேலும், அவதுாறு பரப்பும் வகையில், போலீசார் தன்னை அடித்ததாக பொய்யான வீடி-யோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு வினோத்தை வெப்படை போலீசார் கைது
செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement