இரண்டு விவசாயிகள் ஒரே நாளில் தற்கொலை
ஹூப்பள்ளி : குந்த்கோல் தாலுகாவின், பரத்வாட் கிராமத்தில் ஒரே நாளில், இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
ஹூப்பள்ளி மாவட்டம், குந்த்கோல் தாலுகாவின் பரத்வாட் கிராமத்தில் வசித்த விவசாயிகள் ரவிராஜ் ஜாடர், 42, பசவன கவுடா பாட்டீல், 56. இவர்கள் வங்கி மற்றும் தனியாரிடம், லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கினர். அதை அடைக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
நான்கைந்து ஆண்டுகளாக, வறட்சி, வெள்ளப்பெருக்கால் விளைச்சல் பாழானது. போட்ட முதலீடும் கைக்கு வரவில்லை. தொடர்ந்து நஷ்டத்தை அனுபவித்தனர். மற்றொரு பக்கம் கடன்காரர்களின் நெருக்கடி அதிகரித்தது. மனம் நொந்த விவசாயிகள், நேற்று அதிகாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஒரே கிராமத்தில், இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குந்த்கோல் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போதைப்பொருள் விற்பனை விவகாரம்; மல்லிகார்ஜூன கார்கே மகனுக்கு நெருக்கமானவர் கைது
-
வெள்ளி விழா படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள்
-
தமிழகத்தில் நடப்பது தம்பிகளின் ஆட்சி: எல்.முருகன் குற்றச்சாட்டு
-
காலையில் நன்றாகத்தான் பேசுகிறார்; மாலையில் குண்டு வீசுகிறார்; புடின் மீது டிரம்ப் பாய்ச்சல்!
-
மக்களின் மொபைல் எண்களை சேகரிக்க அதிகாரிகளை பயன்படுத்தும் தி.மு.க., அரசு; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
எம்ஜிஆர் உடன் 26: சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி
Advertisement
Advertisement