ப.வேலுார் வாரச்சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு,,



ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், ப.வேலுார், சுல்தான்பேட்டை, மோகனுார் பிரிவு சாலையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்-கோழி சந்தை கூடுகிறது.


இங்கு, பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்டமங்கலம், பொத்-தனுார், ப.வேலுார் பகுதியை சேர்ந்த விவசாயிகள், மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விற்ப-னைக்கு கொண்டு வருகின்றனர். அவ்வாறு கொண்டு வரப்படும் நாட்டுக்கோழிகளை, வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வர்.

கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம், கோழிகள் வரத்து அதி-கரித்ததால், அதன் விலை சரிந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக்கோழி, 650 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், நேற்று, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், ஒருசில வியாபாரிகள், பண்ணை கோழிகளை நாட்டுக்-கோழி என ஏமாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதனால், வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததாக, விவசாயிகள் தெரிவித்-தனர்.

Advertisement