டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் பலி

ப.வேலுார்: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, பி.ஏ., சமுத்திரத்தை சேர்ந்த மனோகரன் மகன் மோகன்ராஜ், 23; இவர், கீரம்பூர் அருகே, புலவர்பாளையத்தில் உள்ள மெக்கானிக் ஒர்க் ஷப்பில் வேலை பார்த்து வந்தார்.


கடந்த, 6ல் தன் இருசக்கர வாகனத்தில், ராசாம்பாளையம் டோல்கேட் அருகே சென்று கொண்டிருந்தார், அப்போது நிலை தடுமாறி சாலையில் விழுந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நேற்று மோகன்ராஜ் உயிரிழந்தார். பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement