பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கும் அமைச்சர் மகேஷ்; அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் இரு வெவ்வேறு அரசுப் பள்ளிகளில் நடந்த சம்பவங்களை குறிப்பிட்டு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், சினிமா மோகத்தை விட்டுவிட்டு, எப்போதுதான் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பாரோ? என்று பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை; பள்ளிக் கல்வித்துறையின் தினசரி சாதனைகள் வரிசையில் இன்று, திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்கள் மது பாட்டிலால் ஆசிரியரைத் தாக்கி மண்டையை உடைத்திருக்கிறார்கள். மற்றொருபுறம், மதுராந்தகம் அருகே புதுப்பட்டு அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து, 5 மாணவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள்.
பள்ளிக் கல்வித் துறையில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்க, உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரான பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ், ப வடிவில் இருக்கைகள் வைப்போம் என, பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கிக் கொண்டிருக்கிறார். சினிமா மோகத்தை விட்டுவிட்டு, எப்போதுதான் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிப்பீர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களே?, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (6)
T.sthivinayagam - agartala,இந்தியா
16 ஜூலை,2025 - 21:48 Report Abuse

0
0
Reply
Chandru - ,இந்தியா
16 ஜூலை,2025 - 21:23 Report Abuse

0
0
Reply
babu - ,
16 ஜூலை,2025 - 20:13 Report Abuse

0
0
vivek - ,
16 ஜூலை,2025 - 21:04Report Abuse

0
0
Reply
Mario - London,இந்தியா
16 ஜூலை,2025 - 19:58 Report Abuse

0
0
vivek - ,
16 ஜூலை,2025 - 21:05Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருப்பணி பாலாலய விழா
-
இடைத்தேர்தல் நடக்காததால் பதவிக்கு காத்திருந்தோர்...ஏமாற்றம் :32 பிரதிநிதிகள் இன்றி உள்ளாட்சி நிர்வாகத்தில் குழப்பம்
-
சிறையில் அடைக்கப்படுவார்!
-
பி.பி.எல்., கிரிக்கெட் போட்டி மாகி அணி வெற்றி
-
குழந்தையுடன் பெண் தற்கொலை வழக்கு கணவர், மாமியாருக்கு 13 ஆண்டு சிறை
-
பா.ம.க., ஆண்டு விழா
Advertisement
Advertisement