பா.ம.க., பொதுக்குழு கூட்டம்
ப.வேலுார்: பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், நாமக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ப.வேலுார் தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைந்த அமைப்பு செயலாளர் செந்தில்குமார், மாநில இளைஞர் சங்க செயலாளர் வடிவேலன், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சுதாகர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் கலந்து கொண்டார்.
கூட்டத்தில், நாமக்கல், கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் அதிகளவில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். வரும், 20ல் விழுப்புரத்தில் நடைபெற உள்ள வன்னியருக்கு இட ஒதுக்கீடு போராட்டத்தில், நாமக்கல் மாவட்ட பா.ம.க., சார்பில் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும்
-
மகள்களுடன் வாழ விருப்பம் : கர்நாடக குகையில் மீட்கப்பட்ட ரஷ்ய பெண்ணின் கணவர் கண்ணீர்
-
ஏமனில் மரண தண்டனை பிடியில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா; இதுவரை நடந்தது என்ன?
-
வெறும் சோற்றுக்கே வந்ததிங்கே பஞ்சம்?
-
பள்ளி மேற்கூரை இடிந்து குழந்தைகள் 5 பேர் காயம்; திறந்து 3 மாதமே ஆன புதிய கட்டடத்தின் அவலம்
-
தேர்தல் பயத்தால் ஊர் ஊராக செல்லும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் கிண்டல்
-
முடிந்தால் என்னையும் சிறையில் அடையுங்கள்; மம்தா பானர்ஜி ஆவேசம்