உள்ளூர் முருங்கை வரத்தால் விலை சரிவு
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் முருங்கை மரங்கள் பரவலாக உள்ளன. அதன் சீசன் இல்லா-ததால், காய்க்கு தட்டுப்பாடு இருந்தது. வெளி-யூரில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்-டதால், ஒரு முருங்கைக்காய், 10 ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்நிலையில் தற்போது விலை குறைந்துள்ளது.
இதுகுறித்து, பனமரத்துப்பட்டியை சேர்ந்த தாத-காப்பட்டி உழவர் சந்தை விவசாயி தங்கவேல் கூறுகையில், ''கடந்த மாதம் திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த முருங்கை கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லரை விலையில் ஒரு காய், 10 ரூபாய்க்கு விற்றது. தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ளூர் முருங்கை விற்பனைக்கு வரத்தொடங்கியதால், கிலோ, 50 ரூபாயாக விலை சரிந்துள்ளது. மேலும் வரத்து அதிகரித்தால், மேலும் விலை சரியும்,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மகள்களுடன் வாழ விருப்பம் : கர்நாடக குகையில் மீட்கப்பட்ட ரஷ்ய பெண்ணின் கணவர் கண்ணீர்
-
ஏமனில் மரண தண்டனை பிடியில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா; இதுவரை நடந்தது என்ன?
-
வெறும் சோற்றுக்கே வந்ததிங்கே பஞ்சம்?
-
பள்ளி மேற்கூரை இடிந்து குழந்தைகள் 5 பேர் காயம்; திறந்து 3 மாதமே ஆன புதிய கட்டடத்தின் அவலம்
-
தேர்தல் பயத்தால் ஊர் ஊராக செல்லும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் கிண்டல்
-
முடிந்தால் என்னையும் சிறையில் அடையுங்கள்; மம்தா பானர்ஜி ஆவேசம்
Advertisement
Advertisement