பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
குளித்தலை, குளித்தலை அடுத்த, பிள்ளபாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ் என்பவரது மகன் மோகன்ராஜ், 23, கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியளவில் மோகன்ராஜ் குளித்தலை பெரியபாலத்தில் உள்ள தன் மனைவி கோகிலாவை பார்த்து விட்டு, வீட்டுக்கு பைக்கில் திருச்சி- - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, கே.பேட்டை பெட்ரோல் பங்க் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில் மோகன்ராஜ் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, குளித்தலை அரசு மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். பணியில் இருந்த மருத்துவர்கள், அவரை பரிசோதித்த போது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். லாலாபேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குளித்தலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி
-
காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல: முதல்வர் ஸ்டாலின்
-
ஈராக் ஷாப்பிங் மாலில் தீ ; 50 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்
-
குற்றச்செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து; இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
-
மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் ரூ. 200 கோடி முறைகேடு; அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
-
தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., வெளியேற தயாரா? கேட்கிறார் அண்ணாமலை
Advertisement
Advertisement