இந்தியாவிற்குள் நுழைய போகிறோம்; வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப் சஸ்பென்ஸ்!

வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், ''இந்தியாவிற்குள் நுழைய போகிறோம்'' என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது: நாங்கள் இந்தோனேசியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தோம். நான் அவர்களின் மிகச்சிறந்த ஜனாதிபதியுடன் பேசினேன். இந்தோனேசியாவில், எல்லாவற்றையும் நாங்கள் முழுமையாக அணுக முடியும். உங்களுக்குத் தெரியும்.
நாங்கள் எந்த வரிகளையும் செலுத்த மாட்டோம். அதுதான் ஒப்பந்தத்தின் மிகப்பெரிய பகுதியாக இருக்கலாம். நாங்கள் இந்தியாவிற்குள் நுழையப் போகிறோம். நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் மக்களால் உள்ளே செல்ல முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை முடிவு செய்ய வேண்டும் என்ற அவசரத்தில் இந்தியா செயல்படவில்லை. இரு நாடுகளும் பலன்பெறும் வகையில் முடிவுகள் இருந்தால் மட்டுமே ஏற்று கொள்வோம் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
@block_P@
இது குறித்து டிரம்ப் கூறியதாவது: கரீபியன், ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரி விதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அனைத்திற்கும் ஒரு வரியை நாங்கள் நிர்ணயிப்போம். குறைந்தது 100 நாடுகளுக்கு 10% க்கும் அதிகமான வரி விதிக்கப்படும், என்றார்.block_P










மேலும்
-
தேசியம் பேட்டி
-
தேர்தல் பயத்தால் ஊர் ஊராக செல்லும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் கிண்டல்
-
முடிந்தால் என்னையும் சிறையில் அடையுங்கள்; மம்தா பானர்ஜி ஆவேசம்
-
ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு
-
இஸ்ரேலின் குற்றங்களுக்கு துணை போகும் அமெரிக்கா; ஈரான் தலைவர் கமேனி கடும் சாடல்
-
'நடத்துவது நல்ல ஆட்சி' என்று முதல்வர் ஸ்டாலினை யாரோ நம்ப வைத்துவிட்டார்கள்; இ.பி.எஸ்.,