இஸ்ரேலின் குற்றங்களுக்கு துணை போகும் அமெரிக்கா; ஈரான் தலைவர் கமேனி கடும் சாடல்

டெஹ்ரான்: இஸ்ரேலின் குற்றங்கள் அனைத்திற்கும் அமெரிக்கா துணை போகிறது என ஈரான் தலைவர் கமேனி குற்றம் சாட்டினார்.



இது குறித்து, ஈரான் தலைவர் கமேனி கூறியதாவது:
ஈரான் அதன் எதிரிகளுக்கு பலத்த அடி கொடுப்பதில் மிகவும் திறமை வாய்ந்தது. அமெரிக்காவையும், இஸ்ரேலையும் எதிர்த்துப் போராடுவது பாராட்டத்தக்கது. இஸ்ரேல் செய்யும் குற்றங்களுக்கு அமெரிக்கா துணை போகிறது. அமெரிக்கா ஒரு புற்றுநோய் கட்டி போன்றது.


அமெரிக்காவின் ஏவல் நாயாக இஸ்ரேல் செயல்படுகிறது.புதிதாக எந்த ஒரு ராணுவ தாக்குதலுக்கும் பதில் அளிக்க, ஈரான் தயாராக உள்ளது. இவ்வாறு ஈரான் தலைவர் கூறியுள்ளார். இஸ்ரேலும், ஈரானும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நீடித்த மோதலுக்குப் பிறகு போர் நிறுத்தத்தை எட்டிய சில நாட்களுக்குப் பிறகு, ஈரான் தலைவர் கமேனி இஸ்ரேலையும், அமெரிக்காவையும் கடுமையாக சாடி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


கடந்த மாதம் இஸ்ரேலுக்கும், ஈராணுக்கும் 12 நாட்களுக்கு மேலாக நடந்த மோதலில்,
ஈரானின் மூத்த ராணுவத் தளபதிகள், அணு விஞ்ஞானிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில், மொத்தமாக 1,060 பேர் உயிரிழந்ததாக ஈரான் அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement