உலக செஸ்: திவ்யா அபாரம்

பதுமி: ஜார்ஜியாவில் பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் நடக்கிறது. 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.
'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் நான்காவது சுற்றில் இந்தியாவின் ஹரிகா, ஹம்பி, வைஷாலி, திவ்யா என நான்கு வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். நேற்று நடந்த முதல் போட்டியில் திவ்யா, சீனாவின் ஜூ ஜினரை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, 49 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். திவ்யா 1.0-0 என முன்னிலையில் உள்ளார். இன்றைய இரண்டாவது போட்டியில் 'டிரா' செய்தால் காலிறுதிக்கு செல்லலாம்.
மற்ற வீராங்கனைகள் ஹரிகா, ஹம்பி, வைஷாலி தங்களது முதல் போட்டியை 'டிரா' செய்தனர்.

Advertisement