விழிப்புணர்வு கருத்தரங்கம்..

தேனி: சமூக நலத்துறை சார்பில் பழனிசெட்டிபட்டியில் தனியார் ஓட்டலில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் தொடர்பான கருத்தரங்கம் நடந்தது.

டி.ஆர்.ஓ., மகாலட்சுமி கருத்தரங்கை துவக்கி வைத்தார். அரசு மருத்துவமனை மனநல டாக்டர் கோரா.ராஜேஷ், வழக்கறிஞர் சசிகலா ஆகியோர் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான சட்டங்கள், தடுப்பு நடவடிக்கைகள், மனநலம், இளம் வயது கர்ப்பம் உள்ளிட்ட தலைப்புகளில் பேசினர்.

பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர். கருத்தரங்கு நாளை வரை நடக்கிறது.

Advertisement