கெங்கைகொண்டான் பேரூராட்சியில் 'நமஸ்தே' திட்ட பதிவு முகாம் துவக்கம்

மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் பேரூராட்சியில் 'நமஸ்தே' திட்டத்தின் கீழ் கழிவு பொருட்கள் சேகரிப்பவர்கள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும் 'நமஸ்தே' மத்திய அரசின் சுகாதார மேலான்மை திட்டம் ஆகும்.
இத்திட்டத்தின் கீழ் கழிவு பொருட்கள் சேகரிப்பவர்கள் கணக்கெடுக்கும் பணி கெங்கைகொண்டான் பேரூராட்சியில் செயல் அலுவலர் மகேஸ்வரி தலைமையில் துவங்கியது.
இத்திட்டத்தில் கீழ் கழிவு பொருட்கள் சேகரிக்கும் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி தொழில் சார் பாதுகாப்பு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தனிப்பட்ட உபகரணங்கள் வழங்கப்படும். இத்திட்டத்தில் சேரும் பணியாளர்கள் தன் சுய விபரங்களை அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு, பள்ளி, உயர்கல்வி உதவித் தொகை மற்றும் பிற தகுதியான திட்டங்களின் நன்மைகள் பயன் பெற பயனாளிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, வரிவசூலிப்பவர் முகமதுபாரூக், அலுவலக ஊழியர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
'யாராக இருந்தாலும் தப்ப முடியாது': கிட்னி விற்பனை குறித்து அமைச்சர் எச்சரிக்கை
-
நாங்கள் போருக்கு அஞ்சவில்லை: ராணுவ தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு சிரியா அதிபர் பதில்
-
சிங்கக்குட்டியை கொஞ்சும் சலுகை; சீன உணவகத்துக்கு விலங்கு ஆர்வலர்கள் கண்டனம்!
-
ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
-
நேர்மையாக இருப்பதால் தான் இத்தனை சிக்கல்; ஜீப் பறிக்கப்பட்ட டி.எஸ்.பி., குமுறல்
-
தி.மு.க., தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்: காமராஜரின் கொள்ளுப்பேரன் கருத்து