காமராஜர் பிறந்த நாள் விழா திருமாவளவன் அன்னதானம்

விருத்தாசலம்: விருத்தாசலம், பாலக்கரையில், வி.சி., கட்சி சார்பில் திருமாவளவனின் தந்தை தொல்காப்பியன் நினைவஞ்சலி நிகழ்ச்சி மற்றும் காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது.
மைய மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமை தாங்கினார். மண்டல துணை செயலாளர் அய்யாயிரம், நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் சுப்பு ஜோதி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் வி.சி., தலைவர் திருமாவளவன் எம்.பி., தனது தந்தை தொல்காப்பியன், முன்னாள் முதல்வர் காமராஜர் படங்களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில், ஒன்றிய பொருளாளர் சக்திவேல், வழக்கறிஞர்கள் மதுசூதனன், தனராஜ், நகர பொருளாளர் தனசேகர், ஒன்றிய பொருளாளர் சக்திவேல், ஒன்றிய பொருப்பாளர்கள் அய்யாதுரை, ரஞ்சித், ராகுல், ரமணா, துரைமுருகன், பாபுஜி, பிரபாகரன், விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
'யாராக இருந்தாலும் தப்ப முடியாது': கிட்னி விற்பனை குறித்து அமைச்சர் எச்சரிக்கை
-
நாங்கள் போருக்கு அஞ்சவில்லை: ராணுவ தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு சிரியா அதிபர் பதில்
-
சிங்கக்குட்டியை கொஞ்சும் சலுகை; சீன உணவகத்துக்கு விலங்கு ஆர்வலர்கள் கண்டனம்!
-
ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
-
நேர்மையாக இருப்பதால் தான் இத்தனை சிக்கல்; ஜீப் பறிக்கப்பட்ட டி.எஸ்.பி., குமுறல்
-
தி.மு.க., தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்: காமராஜரின் கொள்ளுப்பேரன் கருத்து