போலி சிம்கார்டு பெற்ற வழக்கில்மாவோயிஸ்ட் தலைவருக்கு ஆயுள் சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு

சிவகங்கை:போலி சிம் கார்டு வாங்கிய வழக்கில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் ரூபேஷுக்கு 64, ஆயுள் தண்டனையும், ரூ.31 ஆயிரம் அபராதமும் விதித்து சிவகங்கை செஷன்ஸ் நீதிபதி அறிவொளி தீர்ப்பளித்தார்.
கேரள மாநிலம் பெரிங்கோட்டுகரா கிராமத்தை சேர்ந்தவர் ரூபேஷ். தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவராக இருந்தார்.
2015ல் கோயம்புத்துார் மாவட்டம் கருமத்தம்பட்டியில் கியூ பிரிவு போலீசார் இவரையும், இவரது மனைவி சியானா உட்பட 5 பேரை கைது செய்தனர். திருச்சூர் வையூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கியூ பிரிவு போலீசார் விசாரணையில் ரூபேஷுக்கு 2015க்கு முன் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இடையன்வலசையை சேர்ந்த நேருவிடம் அவரது மகனுக்கு வேலை வாங்கித்தருவதாக விசாரணைக்கு தேவைப்படும் எனக்கூறி அவரது ரேஷன் கார்டை வாங்கி கொண்டு கன்னியாகுமரி சென்று விட்டார். அங்கு நேரு பெயரில் உள்ள ரேஷன் கார்டை அடையாளமாக காண்பித்து சிம்கார்டு வாங்கி தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்திற்காக பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார். 2015 நவ.,17 சிவகங்கை கியூ பிரிவு போலீசார் போலி ஆவணங்களை காண்பித்து சிம்கார்டு வாங்கியதாக வழக்கு பதிந்து, ரூபேைஷ கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. திருச்சூர் சிறையில் இருந்த ரூபேைஷ கேரள போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
போலி ஆவணம் மூலம் சிம்கார்டு வாங்கியது உட்பட 8 பிரிவுகளின் கீழ் ரூபேஷுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.31 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அறிவொளி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் அழகர்சாமி ஆஜரானார்.
ரூபேஷ் மீது கோயம்புத்துார், மதுரை, திருப்பூர் பல்வேறு மாவட்டங்களில் 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும்
-
ரூ.36 கோடி ஹெராயின் மிசோரமில் பறிமுதல்
-
கோயிலுக்குள் நுழைவதை ஜாதி அடிப்படையில் தடுக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் இளம்பெண் உடல் நசுங்கி இறப்பு
-
உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கணவனை கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது
-
பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்; 4பேர் கைது
-
'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்