'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்
சென்னை: 'திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், தரிசன கட்டண உயர்வு அறிவிப்பை, திரும்பப் பெறவில்லை எனில், போராட்டங்கள் நடத்தப்படும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின், சிறப்பு தரிசன கட்டணத்தை, 50 ரூபாயில் இருந்து, 100 ரூபாயாக உயர்த்தப் போவதாக, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருப்பது, கண்டனத்திற்கு உரியது. பணம் படைத்தவர்களும், அதிகார பலம் உடையவர்களும், எவ்வித தடையுமின்றி எளிதாக இறைவனை சென்று தரிசிக்கையில், ஏழை, நடுத்தர மக்கள் மீது மட்டும், எதற்காக நிதிச்சுமை ஏற்றப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக, கோவில்களில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராமல், கூட்ட நெரிசலால், பக்தர்கள் அவதிப்படுவதை, அறநிலையத்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த திராணியின்றி, கட்டண உயர்வு வாயிலாக, கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க முயற்சிக்கிறதா, இந்த ஹிந்து விரோத அரசு.
கோடி, கோடி ரூபாயாக கொள்ளை அடிக்கும், தி.மு.க., தலைவர்களுக்கு வேண்டுமானால், 50 ரூபாய் உயர்வு என்பது சாதரணமாக இருக்கலாம். ஆனால், நான்கு பேர் உடைய ஏழை குடும்பத்துக்கு, தரிசன கட்டணம், 400 ரூபாய் என்பது ஒரு நாள் ஊதியம்.
எனவே, ஏழை மக்களை வஞ்சிக்கும் இந்த அறிவிப்பை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இல்லையேல், அண்ணாமலையார் சாட்சியாக, தமிழக பா.ஜ., சார்பில், மிகப் பெரிய அறப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
இந்திய விமானங்கள் ஆக.24 வரை வான்வெளியில் பறக்கக்கூடாது; பாக்., தடை நீட்டிப்பு
-
இந்தியாவில் முதல்முறை...! கோவையில் கல்லீரல் மாற்று சிகிச்சையில் பரஸ்பரம் உதவிக்கரம்
-
செல்லியம்மன் தேர் திருவிழா
-
அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு
-
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு நடுவீரப்பட்டு அருகே பரபரப்பு
-
இன்ஸ்பெக்டர் மீது பெண் புகார்