எஸ்.எஸ்.ஐ., மயங்கி விழுந்து பலி

சாத்துார்:விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தவர் ராஜேந்திரன் 53, வீட்டுக்கு அருகில் மைதானத்தில் நண்பர்களுடன் இறகு பந்து விளையாடினார். திடீரென மயங்கி விழுந்தார்.


அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மாரடைப்பில் இறந்தது தெரிந்தது. அவருக்கு மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். அவரது உடலுக்கு டி.எஸ்.பி., நாகராஜன், இன்ஸ்பெக்டர் கமல் , போலீசார் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement