சேந்தையில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்: 1,234 மனுக்கள் அளிப்பு
சேந்தமங்கலம் :சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், மொத்தம், 1,234 மனுக்கள் பெறப்பட்டன.
சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல், நேற்று, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் துர்காமூர்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். காலை, 10:00 மணிக்கு தொடங்கி, மாலை, 4:00 மணி வரை தொடர்ந்து நடந்தது. இந்த முகாமில், 13 அரசு துறை அலுவலர்கள் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். இதில், மருத்துவ காப்பீடு அட்டை, ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், கடை மாற்றம் ஆகிய பணிகள் உடனடியாக செய்து கொடுக்கப்பட்டன.
முகாமில் பல்வேறு துறைகள் சார்பில், மொத்தம், 1,234 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு, 552 பெண்கள் மனு அளித்துள்ளனர். மேலும், சேந்தமங்கலம் அரசு மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. தாசில்தார் வெங்கடேஸ்வரன், டவுன் பஞ்., செயல் அலுவலர் வனிதா, தலைவர் சித்ரா தனபாலன், நகர செயலாளர் அசோக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும்
-
பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்; 4பேர் கைது
-
'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்
-
அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
-
ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட்டுகள்: பழனிசாமி
-
காங்., தலைவர்கள் செயலிழந்து விட்டனர்
-
காமராஜர் சர்ச்சை முடிந்து போன விவகாரம்: செல்வப்பெருந்தகை