தார் மிஷினில் துப்பட்டா சிக்கி இரண்டு மகன்களின் தாய் பலி
குமாரபாளையம், குமாரபாளையம், மாரக்காள்காடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி சத்யா, 34; இவர் அதே பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் தார் மிஷின் ஓட்டும் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஹரிஸ்ராஜ், 14, தருண்ராஜ், 6, என, இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், விசைத்தறி கூடத்தில், நேற்று மதியம், 1:00 மணிக்கு, சத்யா தார் மிஷின் ஓட்டிக்கொண்டிருந்தார்.அப்போது அவரது துப்பட்டா, மிஷின் சக்கரத்தில் சிக்கி இழுத்ததில், கழுத்து இறுகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்; 4பேர் கைது
-
'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்
-
அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
-
ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட்டுகள்: பழனிசாமி
-
காங்., தலைவர்கள் செயலிழந்து விட்டனர்
-
காமராஜர் சர்ச்சை முடிந்து போன விவகாரம்: செல்வப்பெருந்தகை
Advertisement
Advertisement