'கொடை'யில் வறண்டது தலையாறு அருவி

கொடைக்கானல்:கொடைக்கானல் வத்தலக்குண்டு ரோட்டில் உள்ள தலையாறு அருவி நீர்வரத்தின்றி வறண்டுள்ளது.

சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் டம்டம் பாறை பகுதியில் எதிரே பள்ளத்தாக்கில் ஆர்ப்பரித்து கொட்டுவது தலையாறு அருவியாகும். பண்ணைக்காடு, மச்சூர், பெரும்பள்ளம், அடுக்கம் உள்ளிட்டவை நீர் பிடிப்பு பகுதியாக உள்ளது. சில மாதங்களாக வறண்ட வானிலை நீடித்து சரிவர மழை பெய்யாத நிலையில் நீர்வரத்து இல்லை.

தலையாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்த நிலையில் தற்போது நீர் வரத்தின்றி வறண்டுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Advertisement