உலக செஸ்: இந்தியா அபாரம்

பதுமி: உலக கோப்பை செஸ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் ஹரிகா, ஹம்பி, திவ்யா முன்னேறினர்.
ஜார்ஜியாவில் பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் நடக்கிறது. 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.
'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் நான்காவது சுற்று நடந்தது. இந்தியாவின் ஹரிகா, ஹம்பி, வைஷாலி, திவ்யா என நான்கு வீராங்கனைகள் பங்கேற்றனர். 19 வயது திவ்யா, உலகின் 'நம்பர்-2' வீராங்கனை, சீனாவின் ஜூ ஜினரை சந்தித்தார். முதல் இரு சுற்று முடிவில் 1.0-1.0 என சமன் ஆனது. நேற்று 'டை பிரேக்கர்' நடந்தது.
இதன் முதல் போட்டியில் வென்ற திவ்யா, அடுத்த போட்டியை 'டிரா' செய்தார். முடிவில் திவ்யா 2.5-1.5 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஹம்பி, சுவிட்சர்லாந்தின் அலெக்சாண்ட்ரா மோதினர். இதில் ஹம்பி 2.5-1.5 என வென்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஹரிகா கலக்கல்
இந்தியாவின் ஹரிகா, உக்ரைனின் கேத்தரினாவை சந்தித்தார். 2 போட்டி முடிவில் ஸ்கோர் சமனில் (1.0-1.0) இருந்து. அடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' முதல் 3 போட்டி 'டிரா' ஆனது. ஸ்கோர் 2.5-2.5 என மீண்டும் இழுபறி ஆனது. 4வது போட்டியில் ஹரிகா வெற்றி பெற்றார். முடிவில் ஹரிகா 3.5-2.5 என வென்றார்.
இந்தியாவின் வைஷாலி, கஜகஸ்தானின் கமலிடெனோவாவை எதிர்கொண்டார். இதில் வைஷாலி 4.5-3.5 என வெற்றி பெற்றார்.
மேலும்
-
இயந்திர நடவு மானியம் ரூ.4,000 விவசாயிகளுக்கு எப்போது கிடைக்கும்?
-
ரயில்களில் உணவு பொருள் விற்பவர்களுக்கு கியூ.ஆர்., கோடு அடையாள அட்டை கட்டாயம்
-
ரூ.36 கோடி ஹெராயின் மிசோரமில் பறிமுதல்
-
கோயிலுக்குள் நுழைவதை ஜாதி அடிப்படையில் தடுக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் இளம்பெண் உடல் நசுங்கி இறப்பு
-
உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கணவனை கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது