செல்லியம்மன் தேர் திருவிழா

சிறுபாக்கம் : சிறுபாக்கம் அருகே செல்லியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.

சிறுபாக்கம் அடுத்த மலையனுாரில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் மற்றும் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று காலை செல்லியம்மன், அய்யனார் சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலை தேர்த் திருவிழா நடந்தது.

ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Advertisement