அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு

கடலுார் : ஆடி முதல் வெள்ளியையொட்டி கடலுார் பகுதியிலுள்ள அம்மன் கோவில்களில் சாகை வார்த்தல், செடல் உற்சவம் நடந்தது.
கடலுார் மஞ்சக்குப்பம் ஆஸ்பிட்டல் சாலையில் உள்ள தேவி கருமாரி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி நேற்று காலை பெண்ணை ஆற்றில் இருந்து கரகம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து சாகை வார்த்தல் நடந்தது.
மதியம் நடந்த செடல் விழாவில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு கும்பம் கொட்டுதல் நடந்தது. இன்று 19ம் தேதி ஆன்மிக சொற்பொழிவும், நாளை 20ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.
சூரப்பநாயக்கன்சாவடி பெரிய பாளையத்தம்மன், புதுப்பாளையம் லோகநாயகி அம்மன், தரைகாத்த காளியம்மன், வண்டிப்பாளையம் அங்காள பரமேஸ்வரி உட்பட பல்வேறு கோவில்களிலும் சாகை வார்த்தல் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விசாரணை நடத்தாமல் டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரையா: ஏற்க முடியாது என்கிறார் அண்ணாமலை
-
கனமழை எச்சரிக்கையால் நடவடிக்கை: ஊட்டியில் சுற்றுலா மையங்கள் மூடல்
-
டி.எஸ்.பி., சுந்தரேசன் வழக்கில் புதிய திருப்பம்; தலைமை காவலர் சஸ்பெண்ட்
-
ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் மோடி; வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு
-
உ.பி.யில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 24 மணிநேரத்தில் 18 பேர் பலி
-
இந்தியா-பாக்.சண்டை பற்றி டிரம்ப் மீண்டும் கருத்து: பார்லி.யில் பிரதமர் அறிக்கை வெளியிட காங். வலியுறுத்தல்
Advertisement
Advertisement