150 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பெத்ததாளாப்பள்ளியில், பா.ம.க., மற்றும் தி.மு.க.,வில் இருந்து விலகிய, 150க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில் இணையும் விழா நேற்று நடந்தது.


மாவட்ட மகளிரணி தலைவி சுகந்தி மாது தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் வரவேற்றார். புதிதாக கட்-சியில் இணைந்தவர்களுக்கு, அ.தி.மு.க., துணை பொதுச்செய-லாளர் முனுசாமி கட்சித் துண்டுகளை அணிவித்து வாழ்த்து தெரி-வித்தார்.நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் முனிவெங்கடப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் பையூர் ரவி, சூர்யா, நகர செயலாளர் கேசவன், வர்த்தக அணி துணைத்த-லைவர் பெருமாள், மீனவர் அணி ஒன்றிய அவைத்தலைவர் தர்மன், கிருஷ்ணன், விஜயகுமார், ரகு, ரத்னவேல், முனிராஜ், பழனி, கோவிந்தசாமி, மாது உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement