முருகர் கோவில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு

அரூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நேற்று தர்மபுரி மாவட்டம், அரூர் மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய கோவிலில், சுவா-மிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. இதில் ஏராள-மான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.


அதே போல், கைலாயபுரம், எல்லப்புடையாம்பட்டி, கெளாப்-பாறை, அச்சல்வாடி, முத்தானுார், ஒடசல்பட்டி, மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்று வட்டார பகுதியிலுள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

Advertisement