'முதல்வரிடம் பதில் இல்லையே' பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை
மதுரை: தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்யக்-கோரி, 12 நாட்கள் போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்க-ளுக்காக, தி.மு.க., கூட்டணி உட்பட, 21 கட்சிகள் குரல் கொடுத்தும்,
முதல்வர் ஸ்டாலினிடம் பதில் இல்லையே என வேதனையில் உள்ளனர்.தமிழகத்தில், 2012ல், பகுதிநேர ஆசிரியர்களாக, 16,549 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களால், ஆறு முதல் பிளஸ் 2 வரை கணினி, ஓவியம், உடற்கல்வி என, 30 லட்சம் மாணவர்கள் பய-னடைகின்றனர். பல ஆண்டுகளாக பணி நிரந்தரம் கேட்டு போராடி வெறுத்த பலர், வேறு பணிக்குச் சென்றுவிட்ட நிலையில், தற்போது, 12,000 பேர் மட்டும் உள்ளனர்.
இந்த ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக, 2016, 2021 சட்டசபை தேர்தல்களின்போது, தி.மு.க., தேர்தல் அறிக்-கையில் வாக்குறுதி அளித்தது. 2021ல் ஆட்சிக்கு வந்தது முதல் தொடர் போராட்டம் நடத்தியும் இவர்களைக் கண்டுகொள்ள-வில்லை. கடைசியாக ஜூலை, 8ல் சென்னையில் போராட்டம் துவங்கி, 12 நாட்கள் நடத்தினர். 1000க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.
அ.தி.மு.க., பா.ம.க., உட்பட பல்வேறு கட்சிகளுடன் தி.மு.க., கூட்டணியில் உள்ள இ.கம்யூ., மனிதநேய மக்கள் கட்சி உட்பட, 21 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இருப்பினும், அமைச்சர் நிலையில் கூட போராட்ட ஆசிரியர்களிடம் பேச்சு நடத்த வரா-ததால், மனஉளைச்சலில் உள்ளனர்.
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கி-ணைப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், ''தி.மு.க., ஆட்சி காலம் நிறைவடைய இன்னும், 280 நாட்கள் தான் உள்ளன. வாழ்க்கை நடத்த முடியாத அளவு குறைந்த சம்பளத்தில், 13 ஆண்டுகள் கடந்து விட்டன. கள்ளச் சாராயம் குடித்து இறந்தால் கூட, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்கிறது. ஆனால், 30 லட்சம் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் வீதியில் நின்று போராட வேண்டியுள்ளது. கொடுத்த
வாக்குறுதியைத்தான் நிறைவேற்ற கேட்கிறோம்,'' என்றார்.
மேலும்
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
-
ஐ.எஸ்., பாணியில் சிறுமிகள் மதமாற்றம்; 'ஆபரேஷன் ஆஸ்மிதா'வில் சிக்கியது சட்டவிரோத கும்பல்