ஆர்.எஸ்.எஸ்., குருபூஜை விழா

கரூர்: கரூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., சார்பில், சவுத் இந்தியன் டெக்ஸ் நிர்வாக இயக்குனர் பெருமாள் தலைமையில், குரு பூஜை விழா பிரேம் மஹாலில் நேற்று மாலை நடந்தது.

மாநில ஹிந்து குடும்ப விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமுத்துசாமி, ஆர்.எஸ்.எஸ்., தொடக்கம், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் லட்சியங்கள், கடந்த, 100 ஆண்டுகால ஆர்.எஸ்.எஸ்., பணிகள், எதிர் கால திட்டங்கள், காவி கொடியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.அப்போது, மாநில பா.ஜ., - ஓ.பி.சி, அணி துணைத்தலைவர் சிவசாமி, பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., மலையப்பசாமி, மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., தலைவர் குமாரசாமி, முன்னாள் தலைவர் குணசேகரன், நகர தலைவர் சுகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement