விமான விபத்து விசாரணையில் உண்மையின் பக்கம் நிற்க விரும்புகிறோம்; பார்லி.யில் மத்திய அரசு விளக்கம்

புதுடில்லி; ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணையில், நாங்கள் உண்மையின் பக்கம் இருக்க விரும்புகிறோம் என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.
ராஜ்ய சபாவில் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேசியதாவது; கடந்த மாதம் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியில் உள்ள விவரங்களை சேகரிப்பதில் விமான விபத்து புலனாய்வு பணியகம் மும்முரமாக இருக்கிறது.
சர்வதேச விமான போக்குவரத்து நெறிமுறைகளுக்கு உட்பட்டு விசாரணை நடக்கிறது. பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடைபெற்று வருகிறது.
நாங்கள் உண்மையின் பக்கம் நிற்க விரும்புகிறோம். வேறு எதற்கும் அல்ல. விபத்தில் சரியாக என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க விரும்புகிறோம். இறுதி விசாரணை அறிக்கைக்கு பின்னரே அதன் விவரங்கள் வெளிவரும்.
இவ்வாறு அமைச்சர் ராம்மோகன் நாயுடு பேசினார்.
வாசகர் கருத்து (1)
அப்பாவி - ,
21 ஜூலை,2025 - 17:20 Report Abuse

0
0
Reply
மேலும்
-
கோல்கட்டா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; பயணிகள் 160 பேர் அவதி
-
விமான விபத்து சம்பவத்தில் வங்கதேசத்துக்கு உதவ தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு
-
திருப்பதி கோவிலில் நாட்டு மாடுகளின் பால் மட்டுமே பயன்படுத்தணும்; கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்
-
விரைவில் விக்டோரியா ஹால்..
-
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; குற்றவாளி பற்றி தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம்; போலீஸ் அறிவிப்பு
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பார்லியில் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புதல்!
Advertisement
Advertisement