அரையிறுதிக்கு முன்னேறினார் திவ்யா * உலக கோப்பை செஸ் தொடரில்...

பதுமி: உலக கோப்பை செஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டாவது இந்திய வீராங்கனை ஆனார் திவ்யா.
ஜார்ஜியாவில் பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் நடக்கிறது. 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.
'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் காலிறுதிக்கு, முதன் முறையாக ஹரிகா, ஹம்பி, வைஷாலி, திவ்யா என நான்கு வீராங்கனைகள் முன்னேறி, வரலாறு படைத்தனர். அடுத்து நடந்த காலிறுதியில் ஹம்பி, சீனாவின் யூஜின் சாங்கை சாய்த்தார்.
உலக செஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை ஆனார் ஹம்பி 38. வைஷாலி, 0.5-1.5 என சீனாவின் ஜோங்இயிடம் வீழ்ந்தார்.
திவ்யா அபாரம்
மற்றொரு காலிறுதியில் 36 வயது ஹரிகா, 19 வயது திவ்யாவை சந்தித்தார். இவர்கள் மோதிய முதல் இரு போட்டி 'டிரா' ஆக, ஸ்கோர் 1.0-1.0 என சமனில் இருந்தது. வெற்றியாளரை முடிவு செய்ய, 'டை பிரேக்கர்' நடந்தது.
முதலில் இரு போட்டி நடந்தது. முதல் போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் திவ்யா. 26 வது நகர்த்தலில் முந்தினார். 33வது நகர்த்தலில் தனது ராணியை இழந்த ஹரிகா, 57 வது நகர்த்தலில் தோற்றார். திவ்யா 2.0-1.0 என முன்னிலை பெற்றார்.
கட்டாய வெற்றி
'டை பிரேக்கரின்' 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஹரிகா களமிறங்கினார். இம்முறை கருப்பு நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, 76 வது நகர்த்தலில் வென்றார். முடிவில் திவ்யா 3.0-1.0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். உலக செஸ் அரையிறுதிக்கு முன்னேறிய இளம் இந்திய வீராங்கனை, இரண்டாவது இந்திய வீராங்கனை ஆனார்.
இன்று அரையிறுதி
இன்று துவங்கும் அரையிறுதி போட்டிகளில் ஹம்பி ('நம்பர்-5')-சீனாவின் லெய் டிங்ஜீ ('நம்பர்-3'), திவ்யா ('நம்பர்-18')-ஜோங்இ (சீனா, 'நம்பர்-8') மோத உள்ளனர்.
மேலும்
-
மதுரை காமராஜ் பல்கலையில் 6 ஆண்டாக பதவி உயர்வு இல்லை: மனஉளைச்சலில் அலுவலர்கள்
-
சீரமைக்கப்பட்டுவரும் மதுரை ஸ்டேஷனில் கேள்விக்குறியாகும் பயணிகள் பாதுகாப்பு: செயின் பறிப்பு சம்பவத்திற்கு பிறகாவது ரயில்வே விழிக்குமா
-
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்: பலதுறை பணி பாதிப்பு: பணிச்சுமையால் அவகாசம் கேட்கும் வருவாய்த்துறை
-
தினமலர் செய்தியால் தீர்வு
-
நலத்திட்ட உதவி
-
உண்டியல் வருவாய் ரூ. 59.99 லட்சம்