உண்டியல் வருவாய் ரூ. 59.99 லட்சம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்கள், கிரிவல உண்டியல்கள் பணம் நேற்று கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரியநாராயணன், மதுரை உதவி கமிஷனர் வளர்மதி, ஆய்வர் இளவரசி முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது
ரொக்கமாக ரூ.59 லட்சத்து 99 ஆயிரத்து 389. தங்கம் 176 கிராம், வெள்ளி 2.990 கிலோ இருந்தது. கோயில் பணியாளர்கள், பக்தர்கள் பேரவையினர், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவியர் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement