துாங்கிய பெண்ணிடம் 7 சவரன் செயின் பறிப்பு
விழுப்புரம் : வளவனுார் அருகே துாங்கிய பெண்ணிடம் இருந்து 7 சவரன் செயினை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் சதீஷ் மனைவி திவ்யா, 32; இவர், நேற்று முன்தினம் தனது மகனுடன் வளவனுார் அடுத்த வடவாம்பலத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார்.
இரவு, மகன் மற்றும் தந்தை, தாய் ஆகியோருடன் வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்து துாங்கினார்.
நேற்று அதிகாலை 3:00 மணிக்கு வீட்டில் நுழைந்த நபர் திவ்யா கழுத்திலிருந்த செயினை பறிக்க முயன்றார். திடுக்கிட்டு எழுந்த திவ்யா, செயினை பிடித்தபடி கூச்சலிட்டார்.
இருப்பினும், மர்ம நபர் 7 சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.
புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குளறுபடிகளின் உச்சமான குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
மடப்புரம் அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு; ரூ.25 லட்சம் தர உத்தரவு
-
மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணியில் கவனம்; தலைமை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை!
-
மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர்கள் மீது புகார்
-
மருத்துவ படிப்பு அறிவிப்பு
-
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏற்பு
Advertisement
Advertisement