விசைப்படகுகளை பழுது பார்ப்பதற்கு மீனவர்களுக்கு நிதி உதவி வழங்கல்

புதுச்சேரி : புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீன்பிடி தடைக்கால நிதி உதவிகளை முதல்வர் வழங்கினார்.
புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் மீன்பிடி தடை காலத்தில் பதிவுபெற்ற மீன்பிடி விசைப்படகுகளுக்கு பழுதுநீக்குவதற்கு மர, இரும்பு மற்றும் பைபர் விசைப்படகுகளுக்கு நிதி உதவி கடந்த நிதியாண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் 2025-2026ம் ஆண்டிற்கான மீன்பிடி தடை காலத்திற்கு புதுச்சேரி பகுதியை சேர்ந்த பதிவு பெற்ற 82 விசைப்படகுகளுக்கு ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.24 லட்சத்து 60 ஆயிரம் மற்றும், 42 சிறிய விசைப்படகுகளுக்கு ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம், ஆக மொத்தம் ரூ.33 லட்சத்தை பதிவு பெற்ற விசைப்படகு உரிமையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு அரசின் செலவின ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதற்கான ஆணையை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலையில் புதுச்சேரியை சேர்ந்த விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்திடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை செயலர் மணிகண்டன், இயக்குனர் முகமது இஸ்மாயில், இணை இயக்குனர் தெய்வசிகாமணி, துணை இயக்குனர் (இயந்திரப்பிரிவு) ராஜேந்திரன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மேலும்
-
மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணியில் கவனம்; தலைமை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை!
-
மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர்கள் மீது புகார்
-
மருத்துவ படிப்பு அறிவிப்பு
-
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏற்பு
-
50 டிகிரி செல்ஷியஸ் வெயில்: ஈரானில் தண்ணீர் தட்டுப்பாடு
-
உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இந்தியா ரூ.25 கோடி நிதியுதவி