கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை

புதுச்சேரி : கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி சண்முகாபுரம் முருகன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் 22, தனியார் கல்லுாரியில் பி.டெக்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் ஒரு பெண்ணிடம் பேசி வந்துள்ளார்.

திடீரென அந்த பெண் பேசாததால் மனவருத்தத்தில் இருந்த வசந்தகுமார், நேற்று காலை வீட்டின் சிமென்ட் ஷீட்டில் வேயப்பட்ட இரும்பு பைப்பில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில் தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement