கடலுாரில் 25ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
கடலுார் : கடலுாரில் வரும் 25ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறி யுள்ளார்.
இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 25ம் தேதி கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. முகாமில் 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கிறது.
தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர் தேர்வு செய்து, பணி நியமன ஆணையை வழங்கும் வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம். முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்கள் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவில் இருந்து நீக்கம் செய்யப்படாது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
குளறுபடிகளின் உச்சமான குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
மடப்புரம் அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு; ரூ.25 லட்சம் தர உத்தரவு
-
மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணியில் கவனம்; தலைமை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை!
-
மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர்கள் மீது புகார்
-
மருத்துவ படிப்பு அறிவிப்பு
-
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏற்பு