கடலுாரில் 25ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

கடலுார் : கடலுாரில் வரும் 25ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறி யுள்ளார்.

இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 25ம் தேதி கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. முகாமில் 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கிறது.

தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர் தேர்வு செய்து, பணி நியமன ஆணையை வழங்கும் வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம். முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்கள் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவில் இருந்து நீக்கம் செய்யப்படாது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement