சைபர் மோசடியில் ரூ.22,845 கோடியை இழந்த இந்தியர்கள்!

1

புதுடில்லி: கடந்த 2024ம் ஆண்டில் சைபர் மோசடியில் இந்தியர்கள் ரூ.22,845.73 கோடியை இழந்துள்ளனர் என பார்லிமென்டில் மத்திய அரசு கூறியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 206 சதவீதம் அதிகம் ஆகும்.


இது தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் பந்தி சஞ்சய் குமார் கூறியதாவது: National Cyber Crime Reporting Portal (NCRP) and the Citizen Financial Cyber Fraud Reporting and Management System (CFCFRMS) ஆகிய இணையதளங்களில் பொது மக்கள் சைபர் மோசடி குறித்து புகார் அளிக்கின்றனர். இரண்டையும், இந்தியன் சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் இயக்கிவருகிறது.


இதன் மூலம் 2024ம் ஆண்டு சைபர் மூலம் நிதி மோசடிநடந்ததாக 36.37 லட்சம் புகார்கள் வந்தன. இது 2023ம் ஆண்டு 24.42 லட்சம் புகார்கள் மட்டுமே வந்தன. 2023ம் ஆண்டு நிதி மோசடியில் ரூ.7,645.18 கோடி இழந்த இந்தியர்கள் கடந்த 2024 ம் ஆண்டு 22,845.73 கோடியை இழந்துள்ளனர். இது 206 சதவீதம் அதிகம் ஆகும்.

மேலும்,17.83 லட்சம் புகார்கள் அடிப்படையில், ரூ.5,489 கோடி பணம் காப்பாற்றப்பட்டது. சைபர் மோசடியில் தொடர்புடைய 9.42 லட்சம் சிம்கார்டுகள் மற்றும் 2.63 லட்சம் ஐஎம்இஐ எண் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பு

சைபர் மோசடி நடந்ததாக

20022 ல் 10,29,026 புகார்களும்

2023 ல் 15,96,493 புகார்களும்

2024 ல் 22,68,346 புகார்களும் வந்துள்ளன.

Advertisement