அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது.

நேரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தலைமை பொறியாளர் வீரசெல்வம், பொது சுகாதார செயற்பொறியாளர் வாசு, நீர்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், உருளையன்பேட்டை தொகுதியில் பொதுப்பணித்துறை மூலம் சுத்தமான குடிநீர், பாதாள சாக்கடை குழாய் அடைப்புகளை சரி செய்தல், புதிய சாலைகள் அமைத்தல், மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement