ராமானுஜருக்கு திருவாதிரை திருமஞ்சனம்

செவிலிமேடு:செவிலிமேடில் உள்ள ராமானுஜருக்கு திருவாதிரை திருமஞ்சனம் நடந்தது.



காஞ்சிபுரம் மாநகராட்சி செவிலிமேடு, அனுஷ்டானகுளம், சாலை கிணறு அருகில், ராமானுஜருக்கு என, தனி சன்னிதி உள்ளது. இங்கு ஆடி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, நேற்று காலை, 10:00 மணிக்கு ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம், மஹாதீப ஆராதனையும் நடந்தது.



தொடர்ந்து வெள்ளி கவசம் மற்றும் மலர் அலங்காரத்தில் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்ளுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement