ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஓட்ஸ் வடை

ஓட்சில் இரும்பு சத்து, மெக்னீஷியம் உட்பட பல விதமான புரத சத்துகள் உள்ளன. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைக்கும். ரத்த அழுத்தம், நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதே காரணத்தால், பலரும் காலை, மாலை டிபனுக்கு இதை பயன்படுத்துகின்றனர்.
ஓட்ஸ் இட்லி, தோசை, உப்புமா செய்வர். இதில் சூப்பரான மசாலா வடையும் செய்யலாம். இது மிகவும் சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
செய்முறை முதலில் பாசிப்பருப்பு மற்றும் ஓட்சை, தனித்தனியாக நீரில் ஊற வைக்கவும். அதன்பின் பாசிப்பருப்பை தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் போட்டு அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், மிளகாய் துாள், உப்பு, சிறிது எண்ணெய், சிறிதாக வெட்டிய வெங்காயம், கொத்துமல்லி தழை, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கையால் பிசையவும். அதன்பின் அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பையும் சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும். வடை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்த பின் மாவை, வடைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் தொட்டு கொண்டால், பொருத்தமாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
- நமது நிருபர் -
மேலும்
-
மான்செஸ்டரில் படுமோசம்; 11 ஆண்டுகளுக்குப் பிறகு சொதப்பிய இந்திய அணி
-
உலக அளவில் வலிமையான சக்தியாக மாறி வரும் இந்திய ராணுவம்; கார்கில் வெற்றி தினத்தில் ராணுவ தளபதி பெருமிதம்
-
சிறப்பாக செயல்பட்ட எம்.பி.,க்கள் 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது; மத்திய அரசு அறிவிப்பு
-
அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்: தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது சுப்ரீம் கோர்ட்
-
சர்ச்சைகளால் தலைப்புச் செய்தியாகும் எம்.பி.,க்கள்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ வருத்தம்
-
நிலுவையில் ரூ.63,000 கோடி குடிநீர் வரி; திணறும் டில்லி அரசு