மணல் திருடியவர் கைது

தேவகோட்டை: கண்ணங்குடி அருகே உள்ள வலையன்வயல் அருகே பாம்பாற்றில் மணல் திருட்டு நடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் கண்காணித்தனர்.

நேற்று முன்தினம் இரவு வலையனவயலை சேர்ந்த அர்ச்சுணன் . 50., ஆற்றில் மணல் அள்ளினார். அவரை கைது செய்து டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement