ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

தேனி: தேனி பெருந்திட்ட வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், வாக்குறுதியை தி.மு.க., அரசு நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செயலாளர் விரேந்திர பிரபு தலைமை வகித்தார். தலைவர் ஜெயராணி, நிர்வாகிகள் மாசாணன், மாரிமுத்து, பெருமாள் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisement