ந.வைரவன்பட்டியில் இன்று தேரோட்டம்

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் வயிரவசுவாமி பிரமோற்ஸவத்தை முன்னிட்டு இன்று மாலை தேரோட்டம் நடை பெறும்.

இக்கோயிலில் வயிரவ சுவாமிக்கு பதினொரு நாட்கள் பிரமோற்ஸவம் நடைபெறும். ஜூலை 20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை 9:15 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவு 7:00 மணிக்கு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. இன்று காலை 9:15 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளலும், மாலை 4:00 மணிக்கு தேர் வடம் பிடித்தலும், இரவு 7:00 மணிக்கு தேர் வடம் பார்த்தலும் நடைபெறும்.

நாளை காலையில் தீர்த்தவாரியுடன், வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவில் பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளலும் நடைபெறும். பதினொராம் திருநாளான ஜூலை 30 காலை 9:15 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கும்,வயிரவ சுவாமிக்கும் அபிேஷக,ஆராதனைகள் நடைபெறும். மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 7:00 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும்.

Advertisement