காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை: நெல்லையில் அதிர்ச்சி

திருநெல்வேலி: நெல்லை கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் கே.டி.சி., நகரில் இன்று காலை வாலிபர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். விசாரணையில், கொல்லப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் கவின்குமார்(28) என்பது தெரியவந்துள்ளது. இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், இந்த விவகாரத்தில் அவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை போலீசார் கவின்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும்
-
பிரதமருக்கும், ஜக்தீப் தன்கருக்கும் இடையே என்ன பிரச்னை; கார்கேவுக்கு தீராத சந்தேகம்
-
காங்கோ சர்ச்சில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 21 பேர் உயிரிழப்பு
-
மேட்டூர் அணை நீர் திறப்பு 1 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
-
மழை விட்டும் தூவானம் விடவில்லை; தாய்லாந்து-கம்போடியா இடையே நீடிக்கும் மோதல்
-
விமானத்தில் பயணிகள் போராட்டம்; கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட பெண் ஊழியர்
-
சிங்கப்பூருடன் வலுவான நட்பில் முக்கிய பங்கு: சந்திரபாபு நாயுடு பெருமிதம்