'சிசிடிவி' கேமராவை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சி நுழைவாயிலில் உள்ள கண்காணிப்பு கேமராவை சீரமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அச்சிறுபாக்கம் பேரூராட்சி நுழைவாயில் பகுதியில், பேரூராட்சியில் இருந்து பஜார் பகுதிக்குச் செல்லும் சாலையை கண்காணிக்கும் வகையில், கண்காணிப்பு கேமரா ஒன்று அமைக்கப்பட்டது.

இது, பேரூராட்சி எதிரில் உள்ள பேருந்து பயணியர் நிழற்குடையை கண்காணிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சில மாதங்களாக இந்த கண்காணிப்பு கேமரா பழுதடைந்து, 'ஒயர்'கள் அறுந்து பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது.

இதனால், குற்ற சம்பவங்களை கண்காணிப்பதில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அச்சிறுபாக்கம் போலீசார், பழுதடைந்துள்ள இந்த கண்காணிப்பு கேமராவை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement